கேரளாவில் மதுக்கடைகள், பார்களுக்கு ஞாயிறு விடுமுறை... இன்று முதல் அமல்!

கேரளாவில் வரும் 10 ஆண்டுகளுக்குள் பூரண மதுவிலக்கை அமல் படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி, ஆண்டு தோறும் பத்து பத்து சதவீதமாக மது விற்பனையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், கேரளாவில் புதிய மது பார்களுக்கு லைசென்சு வழங்கப்பட வில்லை. மேலும் 418 மது பார்களுக்கான லைசென்சு ரத்து செய்யப்பட்டு மது பார்களும் மூடப்பட்டன. காந்தி ஜெயந்தி தினமான கடந்த 2-ந் தேதி கேரளாவில் 10 சதவீத அரசு மதுக்கடைகள் மற்றும் மது பார்கள் மூடப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மது கடைகள், பார்களுக்கு விடுமுறை விட வேண்டும் என்றும் கேரள அரசு அறிவித்திருந்தது.
இத்திட்டம் இன்று முதல் கேரளாவில் அமலுக்கு வந்துள்ளது. இதனால் கேரளாவில் இன்று மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன..
முன்னதாக ஞாயிற்றுக் கிழமை மதுக்கடைகளை மூடுவதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால் மதுக்கடைகள், பார்களை ஞாயிற்றுக்கிழமை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்ததை தொடர்ந்து அவர்கள் மது பார்களை மூட சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications