கேரளாவில் கேஎப்சி, மெக்டொனால்டு உணவகங்களை அடித்து நொறுக்கிய நக்ஸலைட்டுகள்!
பாலக்காடு: அன்னிய நாட்டு நிறுவனங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்ற கோஷத்துடன் வந்த ஒரு கும்பல் கேரள மாநிலம் பாலக்காட்டிலுள்ள கேஎப்சி மற்றும் மெக்டொனால்டு ஆகிய பன்னாட்டு சங்கிலி தொடர் உணவகங்களை அடித்து நொறுக்கியது.
கேரளாவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், பாலக்காடு நகருக்குள்ளேயே அவர்களின் ஆதரவாளர்கள் புகுந்து ஒரு தாக்குதலை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு நகருக்குள் உள்ள மெக்டொனால்டு மற்றும் கேஎப்சி ஆகிய உணவகங்களை அடித்து நொறுக்கினர். இதனால் அதன் கண்ணாடி தடுப்புகள் நொறுங்கி விழுந்தன.

சுமார் 9 பேர் கொண்ட கும்பல் இத்தாக்குதல்களில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தாக்குதலுக்கு பிறகு துண்டு பிரசுரங்களை அங்கு அள்ளி வீசிவிட்டு அக்கும்பல் தப்பியோடிவிட்டது.
அந்த துண்டு பிரசுரத்தில், தங்களது இயக்கத்தின் பத்தாவது ஆண்டு துவக்க நிகழ்ச்சியை கொண்டாடிவரும் இந்த நேரத்தில், அன்னிய நிறுவனங்களுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கேஎப்சியும், மெக்டொனால்டும் இந்திய மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான், எங்கள் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசுரத்தின்கீழே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் (மாவோயிஸ்ட் பிரிவு) மேற்கு மண்டல செயலாளர் கையெழுத்து உள்ளது.
இதேபோல வயநாடு, அட்டப்பாடி வனத்துறை அலுவலகங்களும் அதிகாலையில் மர்ம கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா அளித்த பேட்டியில் "நடைபெற்ற தாக்குதல்களை உண்மையிலேயே மாவோயிஸ்டுகள்தான் நடத்தினரா, அல்லது அவர்கள் பெயரை பயன்படுத்தி வேறு யாரும் இத்தாக்குதலில் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரிக்கப்படும். மாவோயிஸ்டுகளே தாக்குதல் நடத்தியிருந்தாலும் கூட மக்கள் அச்சப்பட தேவையில்லை. அவர்களை சமாளிக்க கேரள போலீசார் தயாராக உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications