ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 3,480 கோடி கூடுதல் அபராதம்
டெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ. 3,480 கோடி அபராதம் விதித்துள்ளது.
கிருஷ்ணா கோதாவரி படுகையில் குறைவாக இயற்கை எரிவாயு உற்பத்தி செய்து வருவதற்காக இந்த அபராதத்தை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விதித்துள்ளது.
இத்தகவலை மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
லோக்சபாவில் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துமூலமாக அளித்த விளக்கத்தில், திருபாய் 1 முதல் 3 எண் எரிவாயுக் கிணறு மற்றும் கேஜி-டி6 எண்ணெய் வயல் ஆகியவற்றிலிருந்து 8 கோடி கன அடி கியூபிக் மீட்டர் எரிவாயுவை தினசரி உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் தினசரி 3 கோடி கன அடி கியூபிக் மீட்டர் எரிவாயுவை மட்டுமே உற்பத்தி செய்கிறது.
இது ஒவ்வொரு ஆண்டும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு எரிவாயு உற்பத்தி 80 மில்லியன் கன அடி கியூபிக் மீட்டராக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
பெட்ரோலிய அமைச்சகம் கடந்த 10-ம் தேதி குறைவான உற்பத்திக்காக 57 கோடி டாலர் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் இப்போது தீர்ப்பாயத்தின் முன் நிலுவையில் உள்ளது என்று பிரதான் தெரிவித்தார். இந்நிறுவனத்திடமிருந்து இயற்கை எரிவாயுவைப் பெறும் மத்திய அரசு நிறுவனங்களான கெயில் மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் ரிலையன்ஸுக்கு எரி வாயுவைப் பெறுவதற்காக செலுத்தும் தொகையை அரசு கஜானாவுக்கு செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. எரிவாயுவுக்கு செலுத்தும் கட்டணத்தில் 50 சதவீத தொகையை இந்த இரண்டு நிறுவனங்களும் அரசுக்குச் செலுத்தும் என்று பிரதான் கூறினார்.
இப்போது விதிக்கப்பட்ட கூடுதல் அபராதத் தொகையோடு சேர்த்து இந்நிறுவனம் ஒட்டுமொத்தமாக 237 கோடி டாலர் (ரூ.14,238.96 கோடி) அபராதம் செலுத்த வேண்டும்.
கிருஷ்ணா கோதாவரி (கேஜி) படுகையில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது. அதாவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கூட்டாளி நிறுவனங்களான பிரிட்டிஷ் பெட்ரோலியம் பிஎல்சி மற்றும் நிகோ ரிசோர்சஸ் ஆகிய நிறுவனங்கள் இங்கு எரிவாயு எடுப்பதற்கு செய்துள்ள முதலீடு மற்றும் நிர்வாகச் செலவு ஆகியவற்றை எரிவாயு விற்பனை மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக அரசுக்கு லாபத் தொகையை பகிர்ந்து அளிக்க வேண்டும். இதன்படி அரசுக்கு வரவேண்டிய லாபத் தொகை 2010-11-ம் நிதி ஆண்டிலிருந்து 2013-14-ம் நிதி ஆண்டு வரை 19 கோடி டாலராக கணக்கிடப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications