பெரும் சர்ச்சை.. பிரதமரை இப்படியா விமர்சிப்பது? காங்கிரஸ் தலைவர் பேச்சால் கொந்தளிக்கும் பாஜக!
போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா படேரியா, பிரதமர் நரேந்திர மோடியை கொல்லுமாறு பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜா படேரியாவின் பேச்சால் கொந்தளித்து போயுள்ள பாஜகவினர், அவரை உடனடியாக கைது செய்யுமாறு பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே, தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தை பாஜக அரசியலாக்க முயல்வதாகவும் ராஜா படேரியா கூறியுள்ளார்.

மோடி மீது அதிகரிக்கும் விமர்சனங்கள்
சமீபகாலமாகவே, பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கு எதிர்க்கட்சித் தலைவர்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸும், ஆம் ஆத்மியும் மோடியை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்தை பார்க்க முடிந்தது. உதாரணமாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை 'ராவணன்' எனக் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

ராஜா படேரியா கிளப்பிய சர்ச்சை
அந்த வகையில், தற்போது மீண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தரம் தாழ்ந்த விமர்சனத்தை மத்திய பிரதேச பாஜக தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். மத்திய பிரதேசத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ராஜா படேரியா. இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில், நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் ராஜா படேரியா உரையாற்றினார்.

"நரேந்திர மோடியை கொல்ல வேண்டும்"
அப்போது அவர், "பாஜக ஆட்சியில் அரசியல் சாசனத்தின் அனைத்து சட்டப்பிரிவுகளும் மீறப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினரும், தலித் சமூகத்தினரும் பாஜக ஆட்சியில் துன்பப்படுகின்றனர். இந்திய அரசியல் சாசனத்தை காக்க விரும்பினால், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், அரசியல் சாசனத்தை காக்க முடியாது" என ராஜா படேரியா பேசினார்.

கொந்தளிப்பில் பாஜக
இந்நிலையில், ராஜா படேரியாவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜா படேரியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, ராஜா படேரியா தனது பேச்சுக்கு இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், "பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற அர்த்தத்திலேயே நான் அவ்வாறு பேசினேன். இதை வேண்டுமென்றே பாஜகவினர் அரசியலாக்கி வருகிறார்கள்" என்றார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications