Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரும் சர்ச்சை.. பிரதமரை இப்படியா விமர்சிப்பது? காங்கிரஸ் தலைவர் பேச்சால் கொந்தளிக்கும் பாஜக!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா படேரியா, பிரதமர் நரேந்திர மோடியை கொல்லுமாறு பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜா படேரியாவின் பேச்சால் கொந்தளித்து போயுள்ள பாஜகவினர், அவரை உடனடியாக கைது செய்யுமாறு பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே, தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தை பாஜக அரசியலாக்க முயல்வதாகவும் ராஜா படேரியா கூறியுள்ளார்.

மோடி மீது அதிகரிக்கும் விமர்சனங்கள்

மோடி மீது அதிகரிக்கும் விமர்சனங்கள்

சமீபகாலமாகவே, பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கு எதிர்க்கட்சித் தலைவர்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸும், ஆம் ஆத்மியும் மோடியை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்தை பார்க்க முடிந்தது. உதாரணமாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை 'ராவணன்' எனக் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

ராஜா படேரியா கிளப்பிய சர்ச்சை

ராஜா படேரியா கிளப்பிய சர்ச்சை

அந்த வகையில், தற்போது மீண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தரம் தாழ்ந்த விமர்சனத்தை மத்திய பிரதேச பாஜக தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். மத்திய பிரதேசத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ராஜா படேரியா. இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில், நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் ராஜா படேரியா உரையாற்றினார்.

"நரேந்திர மோடியை கொல்ல வேண்டும்"

அப்போது அவர், "பாஜக ஆட்சியில் அரசியல் சாசனத்தின் அனைத்து சட்டப்பிரிவுகளும் மீறப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினரும், தலித் சமூகத்தினரும் பாஜக ஆட்சியில் துன்பப்படுகின்றனர். இந்திய அரசியல் சாசனத்தை காக்க விரும்பினால், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், அரசியல் சாசனத்தை காக்க முடியாது" என ராஜா படேரியா பேசினார்.

கொந்தளிப்பில் பாஜக

கொந்தளிப்பில் பாஜக

இந்நிலையில், ராஜா படேரியாவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜா படேரியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, ராஜா படேரியா தனது பேச்சுக்கு இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், "பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற அர்த்தத்திலேயே நான் அவ்வாறு பேசினேன். இதை வேண்டுமென்றே பாஜகவினர் அரசியலாக்கி வருகிறார்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+