பெரும் சர்ச்சை.. பிரதமரை இப்படியா விமர்சிப்பது? காங்கிரஸ் தலைவர் பேச்சால் கொந்தளிக்கும் பாஜக!
போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா படேரியா, பிரதமர் நரேந்திர மோடியை கொல்லுமாறு பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜா படேரியாவின் பேச்சால் கொந்தளித்து போயுள்ள பாஜகவினர், அவரை உடனடியாக கைது செய்யுமாறு பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே, தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தை பாஜக அரசியலாக்க முயல்வதாகவும் ராஜா படேரியா கூறியுள்ளார்.

மோடி மீது அதிகரிக்கும் விமர்சனங்கள்
சமீபகாலமாகவே, பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கு எதிர்க்கட்சித் தலைவர்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸும், ஆம் ஆத்மியும் மோடியை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்தை பார்க்க முடிந்தது. உதாரணமாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை 'ராவணன்' எனக் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

ராஜா படேரியா கிளப்பிய சர்ச்சை
அந்த வகையில், தற்போது மீண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தரம் தாழ்ந்த விமர்சனத்தை மத்திய பிரதேச பாஜக தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். மத்திய பிரதேசத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ராஜா படேரியா. இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில், நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் ராஜா படேரியா உரையாற்றினார்.

"நரேந்திர மோடியை கொல்ல வேண்டும்"
அப்போது அவர், "பாஜக ஆட்சியில் அரசியல் சாசனத்தின் அனைத்து சட்டப்பிரிவுகளும் மீறப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினரும், தலித் சமூகத்தினரும் பாஜக ஆட்சியில் துன்பப்படுகின்றனர். இந்திய அரசியல் சாசனத்தை காக்க விரும்பினால், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், அரசியல் சாசனத்தை காக்க முடியாது" என ராஜா படேரியா பேசினார்.

கொந்தளிப்பில் பாஜக
இந்நிலையில், ராஜா படேரியாவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜா படேரியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, ராஜா படேரியா தனது பேச்சுக்கு இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், "பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற அர்த்தத்திலேயே நான் அவ்வாறு பேசினேன். இதை வேண்டுமென்றே பாஜகவினர் அரசியலாக்கி வருகிறார்கள்" என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications