"கோட்சே தம்பிக்கு காட்டப்பட்ட கருணையை ஏன் ராஜீவ் கொலையாளிகளுக்குக் காட்டக் கூடாது...?"
டெல்லி: மகாத்மா காந்தியை விட பெரியவர் யாருமில்லை. அவரை விட மிகப் பெரியவர் யாரும் இல்லை. அப்படிப்பட்ட மகாத்மா காந்தியைக் கொன்ற வழக்கிலிருந்து நாதுராம் கோட்சேவின் தம்பியை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட். அப்படி இருக்கையில் அதே நியாயத்தை ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கும் ஏன் வழங்கக் கூடாது என்று தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி கேட்டுள்ளார்.
மகாத்மா காந்தி கொலை வழக்கில் நாதுராம் கோட்சேவின் தம்பி விநாயக்ராம் கோட்சே மீது சதித் திட்ட புகார் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 1964ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தலைமை நீதிபதி தத்து தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், ராஜீவ் கொலையாளிகளான ராபர்ட் பயஸ், வி.ஸ்ரீஹரன், சாந்தன், ஜெயக்குமார், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில்தான் நேற்று இப்படி வாதிட்டார் திவிவேதி. அவரது வாத விவரம்:

காந்தியை விட யார் பெரியவர்
மாபெரும் தலைவரான மகாத்மா காந்தியை விட யாரும் உயர்ந்தவர் இல்லை. அவரை விட பெரியவர் யாரும் இல்லை. தேசத்தின் தந்தையாக போற்றப்படுபவர் காந்தி.

விநாயக் ராம் கோட்சேவுக்கு இரங்கினோமே
அப்படிப்பட்ட காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நாதுராம் கோட்சேவின் தம்பி விநாயக் ராம் கோட்சேவுக்கு இரக்கம் காட்டி அவரை விடுதலை செய்தது இதே சுப்ரீம் கோர்ட்.

16 ஆண்டுகளில் விடுதலை
விநாயக்ராம் கோட்சே 16 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். யாரும் அதை அப்போது கேள்வி கேட்கவில்லை, எதிர்க்கவில்லை. பிறகு ஏன் இவர்களை மட்டும் எதிர்க்க வேண்டும். ஏன் விடுவிக்கக் கூடாது.

கொலை செய்தது சரியில்லைதான்
இந்தத் தலைவர்கள் படுகொலை செய்யபப்ட்டதை நான் நியாயப்படுத்தவில்லை. மிகவும் சோகமான சம்பவங்கள் இவை. ஆனால் இத்தனை காலத்திற்குப் பிறகும் ஏன் இவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் எனது கேள்வி.

அதிகாரத்தை எப்படிப் பறிக்க முடியும்
ஒரு மாநில அரசுக்கு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய உரிமை உள்ளது. அதிகாரம் உள்ளது. அதைத் தடுக்க முடியாது. ஒருவேளை அதை தடுக்க உச்சநீதிமன்றம் முயன்றால், மத்திய அரசு முயன்றால் அது மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் செயலாகவே அமையும். அதை உச்சநீதிமன்றம் செய்யக் கூடாது.

அரசியல் சாசனப்படி தவறாகும்
மாநில அரசு தனது சட்டப்பூர்வமான அதிகாரத்தை செயல்படுத்த விடாமல் உச்சநீதிமன்றம் தடுத்தால், அது அரசியல் சாசனச் சட்டத்தின் 21வது பிரிவின்படி உயிர் வாழும் உரிமையை மறுக்கும் செயலாக அமையும் என்றார் அவர்.
விசாரணை வருகிற செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடரும்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications