பிரிவினைவாதப் புயலைத் தடுத்து முறியடிப்போம்... கிரண் குமார் ரெட்டி 'டச்சிங்' பேச்சு!

ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று தீவிரமாக போராடி வருபவர்களில் ஒருவர் கிரண் குமார் ரெட்டி.
மாநிலப் பிரிவினையை தற்போது பாய்லின் புயலுடன் ஒப்பிட்டு அவர் உணர்ச்சிகரமாக பேசியுள்ளார். தற்போது ஆந்திராவைப் பிரிக்கும் செயல் கூட ஒரு புயல் போலத்தான். இந்த பிரிவினைவாதப் புயலை நான் முறியடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்...
நம்மால் பாய்லின் புயலை நிறுத்த முடியவில்லை. ஆனால் பிரிவினைவாதப் புயலை நிச்சயம் தடுக்க முடியும். நிச்சயம் தடுப்போம்.
புயல் தாக்கினால் அனைத்துப் பகுதிகளையம்தான் தாக்கும். அதற்கு இது ஆந்திரா, அது தெலுங்கானா என்று தெரியாது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த பிரிவினைவாதப் புயலை தடுத்து நிறுத்துவோம்.
புயல் வீசிய இந்த நேரத்தில் இப்படி பேசக் கூடாதுதான். ஆனால் மக்கள் ஆதரவுடன் பிரிவினைவாதத்தை நாம் தடுத்து நிறுத்த முடியம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் கிரண் குமார் ரெட்டி.












Click it and Unblock the Notifications