மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு... இது கொச்சியில்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அந்நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கொச்சியில் அடுத்த ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது. இதையடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வழங்க வாய்ப்பு கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மெட்ரோ ரயில் நிலையங்களில், பராமரிப்புப் பணி, வாடிக்கையாளர்கள் தொடர்பு பணி உள்ளிட்ட பல துறைகளில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் எலிஸ் ஜார்ஜ் கூறியதாவது: சமூகத்தில் திருநங்கைகள் தாங்கள் ஒடுக்கப்படுவது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கு கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் லைவாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் திருநங்கைள் தாங்கள் நினைப்பது போல, சமூதாயத்தில் ஓர் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று கூறினார்.
கொச்சி காவல்துறையின் பரிந்துறையை ஏற்று, கொச்சி மெட்ரோ நிர்வாகம் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது என முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் அதிக அளவில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications