5 அடி 9 அங்குல உயரத்தால் கோலிக்கு வந்த பிரச்சனை.. சர்ச்சையில் சிக்கினார்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தன்னுடைய 5 அடி 9 அங்குல உயரத்தால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தன்னுடைய 5 அடி 9 அங்குல உயரத்தால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, தன்னுடைய உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இந்திய வீரர்களில் இவரது உடல்தான் மிகவும் கட்சிதமானது.
இந்த நிலையில் இவர் தனது உயரம் காரணமாக சர்ச்சையில் சிக்கி உள்ளார். நேற்று நடந்த விளம்பர விழா ஒன்றில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
அந்த விழாவில் இந்திய டென்னிஸ் ஸ்டார் வீராங்கனை, கர்மன் கார் தாண்டி கலந்து கொண்டார். வாட்ச் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் என்பதால் கோலியும், கர்மனும் அருகருகே நின்று புகைப்படம் எடுத்தனர்.
You can be anything but the woman can’t be taller than the man.
— Sanobar (@SanobarFatma) October 7, 2018
Such fragile ego.
Such vanity pic.twitter.com/tj0Omypr6g
கோலியின் உயரம் 5 அடி 9 அங்குலம், ஆனால் கர்மனின் உயரம் 6 அடி 2 அங்குலம். இதன் காரணமாக கோலி, கர்மனுக்கு அருகே சின்ன ஸ்டூல் போட்டு நின்றார். இதுதான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு மேல்தான் உயரமாக இருக்க வேண்டுமா, உயரம் கம்மியாக இருந்தால் தவறா என்று சர்ச்சை எழுந்துள்ளது. அதே சமயம் இது புகைப்படம் சரியாக இருக்க வேண்டும் என்று செய்யப்பட்ட ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது.