கவனக் குறைவாக பிறந்து 8 நாளே ஆன குழந்தையின் விரலை வெட்டி குப்பையில் போட்ட நர்ஸ்... சஸ்பெண்ட்!
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் கவனக்குறைவாக பிறந்து 8 நாளே ஆன குழந்தையின் விரலை வெட்டி குப்பைத் தொட்டியில் போட்ட நர்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பலுர்கட் நகர மருத்துவமனையில் கடந்த வாரம் பிறந்து 8 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று வயிற்றுப்போக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அப்போது உப்புக் கலந்த சலைன் திரவம் செலுத்த, அக்குழந்தையின் இடதுகையில் கட்டு போடப்பட்டது.

சிகிச்சைக்குப் பின் குழந்தை உடல்நிலைத் தேறியதைத் தொடர்ந்து, அக்குழந்தையின் கையில் போடப்பட்டிருந்த கட்டு கடந்த 12ம் தேதி அகற்றப்பட்டது. அப்போது கவனக்குறைவாக செயல்பட்ட நர்ஸ், தவறுதலாக அக்குழந்தையின் விரலையும் வெட்டி, அதை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்.
இச்சம்பவம் குறித்து அக்குழந்தையின் தந்தை, மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நர்ஸ் மீது மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி, விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், கோல்கட்டாவில் செய்தியாளர்கள் மத்தியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "மருத்துவமனையில், குழந்தையின் விரலை வெட்டி குப்பைத் தொட்டியில் போட்ட நர்ஸ், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற அலட்சியப் போக்கை அனுமதிக்க முடியாது. அந்த நர்சை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும். நர்சின் செயல் அஜாக்கிரதை மட்டுமல்ல; கிரிமினல் குற்றம் ஆகும்" எனத் தெரிவித்துள்ளார்.
கையில் போடப்பட்டிருந்த கட்டை அகற்றும் போது குழந்தையின் விரலை நர்ஸ் வெட்டிய சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications