For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக காய்கறிக்கு தடை.. புதிய கட்டுப்பாடுகளை விதித்து நெருக்கடி கொடுக்கும் கேரளா..

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக சமீபத்தில் கேரளாவில் புகார் எழுந்தது.

lorry

இதையடுத்து, கேரள அரசு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அந்த கட்டுப்பாட்டின்படி, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

அவ்வாறு சான்றிதழ் இல்லாமல் வரும் வாகனங்கள் கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்படும். இந்த புதிய கட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்தில் அமலுக்கு வரும் என கேரள அரசு என அறிவித்துள்ளது.

காய்கறி தவிர பால், இறைச்சிக்கும் தடை விதிக்க கேரள அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Kreala impose restrictions on vegitable truck in next week
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X