நாங்க எப்பவுமே "கிங்" தான்... அன்றே அடித்துக் கூறிய குமாரசாமி
எங்கள் கட்சி கிங்காகவே இருக்கும், கிங் மேக்கராக இருக்காது என்று ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி கூறியது ஓரளவுக்கு பலித்து விட்டது.
Recommended Video

பெங்களூர்: எங்கள் கட்சி கிங்காகவே இருக்கும் என்றும் கிங் மேக்கராக இருக்காது என்றும் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி கூறியது ஏதோ ஒரு வகையில் பலித்துவிட்டது.
கர்நாடகத்தில் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளும், பின்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளும் மதசார்பற்ற ஜனதா தளம்தான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் என்று கூறியிருந்தன.

கிங்தான்
ப்ரீபோல் கணிப்புகள் குறித்து குமாரசாமி கூறுகையில் இந்த கருத்து கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. இவை ஆளும் கட்சிக்கு சாதகமாகவே கூறும். எனவே எங்கள் செயல்பாடுகளின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. நாங்கள் கிங்காக இருந்து தனி பெரும்பான்மை அமைத்து ஆட்சி அமைப்போமே தவிர கிங் மேக்கராக இருக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.

பாஜக முன்னிலை
இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை முதலே தொடங்கியது. இதில் பாஜக முன்னிலை வகித்து வந்தது. இதனால் அக்கட்சிதான் யாருடைய தயவும் இல்லாமல் ஆட்சி அமைக்கும் என்ற சூழல் நிலவியது.

திடீர் டுவிஸ்ட்
கர்நாடக தேர்தல் முடிவுகளில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது. அதன் படி எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் சோனியா காந்தி , மஜத தலைவர் தேவ கௌடாவை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் தங்களை ஆதரித்தால் குமாரசாமிதான் முதல்வராக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

குமாரசாமியின் வாக்கு பலித்தது
இந்நிலையில் குமாரசாமியின் வாக்கு பலித்து விட்டது. கிங்காக இருந்து ஆட்சியை பிடிப்போம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் முதல்வராகவுள்ளார். ஏதோ ஒரு வகையில் அவர் கிங்தான் என்பதை நிரூபித்து விட்டார். அவரது கணிப்பு தெரிந்தோ தெரியாமலோ பலித்துவிட்டது.












Click it and Unblock the Notifications