24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்- காலரை தூக்கிவிடும் குமாரசாமி
24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: கர்நாடக முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.
பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ்- மஜத இரண்டும் இணைந்தன. ஆனால் குமாரசாமிதான் முதல்வர் என்று சோனியா உறுதியளித்தார். அதன்பேரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி.

ஆனால் ஆளுநர் வஜுபாய் வாலாவோ எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு எடியூரப்பாவுக்கு கடந்த வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகத்தில் முதல்வராக பதவியேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.
இந்நிலையில் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் குமாரசாமி முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு ஆளுநர் 15 நாட்கள் காலஅவகாசம் கொடுத்தார்.
எனினும் குமாரசாமி தனக்கு 15 நாட்கள் எல்லாம் வேண்டாம். உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் கர்நாடக முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்.
கர்நாடகா முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில் நாளை டெல்லியில் சோனியா, ராகுல் ஆகியோரை சந்திக்கவுள்ளேன் என்றார் குமாரசாமி. கர்நாடக முதல்வராக குமாரசாமி வரும் 23-ஆம் தேதி பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கு வருகை தர வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேவகௌடா அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications