"டெபாசிட்” என்ற பெயரில் கல்விக் கட்டண மோசடி - கேசவ ரெட்டி கல்விக் குழுமத் தலைவர் கைது!
கர்னூல்: ஆந்திராவில் பள்ளிக் கட்டணம் என்ற பெயரில் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டதாக கேசவ ரெட்டி கல்வி நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கேசவ ரெட்டி கல்வி நிறுவனம் சார்பில் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 40 ஆயிரம் மாணவர்கள் இந்த கல்வி நிறுவனங்களில் படித்து வருகிறார்கள். இதன் தலைவராக கேசவ ரெட்டி உள்ளார்.

இந்த கல்வி நிறுவனம் மாணவர்கள் சேர்க்கையில் புதிய நடைமுறையை கையாண்டது. அதாவது பள்ளியில் எல்.கே.ஜி. சேரும் மாணவர்களிடம் பெருந்தொகை டெபாசிட்டாக வசூலிக்கப்படும். அந்த தொகை மூலம் கிடைக்கும் வட்டி கல்வி கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படும். பள்ளி இறுதி படிப்பை முடித்து வெளியேறும் போது அந்த மாணவர்கள் கட்டிய டெபாசிட் தொகை அவர்களுக்கு திருப்பி செலுத்தப்படும்.
இந்த புதிய நடைமுறை மூலம் மாணவர்கள் வருடா வருடம் கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த வகையில் ஒவ்வொரு மாணவரிடம் ரூபாய் 1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகம் கூறியபடி மாணவர்களுக்கு டெபாசிட் தொகை திருப்பி கொடுக்கப்படவில்லை. இந்த வகையில் ரூபாய் 540 கோடியை கேசவ ரெட்டி மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த கர்னூல் போலீசார் நேற்று கேசவ ரெட்டியை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
மாணவர்களிடம் வசூலித்த தொகையில் கேசவ ரெட்டி ரூபாய் 10 கோடிக்கு பள்ளி வாகனம் வாங்கி உள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் பல கோடி பணத்தை முடக்கி உள்ளார். ரியல் எஸ்டேட் வியாபாரம் மந்தமானதால் அவரால் பணத்தை திருப்பி கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
கேசவ ரெட்டி கைதானாலும் அவரது கல்வி நிறுவனம் பாதிப்பு இல்லாமல் நடத்தப்படும் என்று ஆந்திர கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications