For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லடாக்கில் புது எழுச்சி.. சீனாவை ''டீல்'' செய்வது இப்படிதான்.. உலக நாடுகளுக்கு பாடம் எடுத்த இந்தியா!

Google Oneindia Tamil News

லடாக்: உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் சீனா அத்துமீற முயன்று வரும் நிலையில், இந்தியா மட்டுமே சீனாவை வித்தியாசமாக "ஹேண்டில்'' செய்து உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தை இந்தியா கையாண்ட விதம் உலக நாடுகளுக்கு முக்கியமான பாடமாக மாறியுள்ளது.

லடாக் பிரச்சனை 4 மாதமாக நீடித்து வருகிறது. கல்வான் மோதலுக்கு பின் லடாக் பிரச்சனை தற்போது உச்ச நிலையில் உள்ளது. இனி லடாக்கில் என்ன நடக்கும், நிலைமை எப்படி மாறும் என்பது கணிக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது.

நிலைமை எப்படி மாறினாலும் அதை எதிர்கொள்ள இந்திய ராணுவம் ''பல்வேறு'' திட்டங்களுடன் தயாராக இருக்கிறது. இதனால்தான் என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று இந்திய ராணுவம் எல்லையில் படைகளை குவித்து வருகிறது.

பூடான் மீதும் கண் வைத்த சீனா.. அடுத்த ஆக்கிரமிப்பு.. . இந்தியாவுக்கு பாதகமாகும் பகீர் முயற்சிபூடான் மீதும் கண் வைத்த சீனா.. அடுத்த ஆக்கிரமிப்பு.. . இந்தியாவுக்கு பாதகமாகும் பகீர் முயற்சி

முடிவு இல்லை

முடிவு இல்லை

லடாக் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா இடையே ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் - சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இரண்டு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டது. இதில் இரண்டு நாடுகளும் ஐந்து உடன்படிக்கை கொண்ட ஒப்பந்தத்தை செய்து இருந்தாலும்.. எல்லையில் மே 5ம் தேதிக்கு முன்பு இருந்த நிலைக்கு செல்ல இரண்டு நாடுகளுமே ஒப்புக்கொள்ளவில்லை.

என்ன வேண்டுமானாலும் நடக்கும்

என்ன வேண்டுமானாலும் நடக்கும்

அதாவது எல்லையில் மீண்டும் படைகளை பழைய இடத்திற்கு கொண்டு செல்ல இரண்டு நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியா தற்போது கைலாஷ் மலை பகுதி மற்றும் டெப்சாங் மலை பகுதிகளை கைப்பற்றி உள்ள நிலையில் எல்லையில் இனி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பேச்சுவார்த்தை வெற்றிபெறாத நிலையில் எல்லையில் போர் ஏற்படவோ, சிறிய அளவிலான மோதல் ஏற்படவோ வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். எல்லையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஆனால்

ஆனால்

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எல்லையில் சீனாவிற்கு இந்தியா பாடம் எடுத்து உள்ளது. எல்லையில் இருக்கும் ஸ்பான்கூர் கணவாய், கைலாஷ் மலை பக்தி , பாங்காங் திசோ அருகே இருக்கும் தாட்டுங் மலை, பிளாக் டாப் , ஹெல்மெட் டாப் , குறுங் ஹில், மாகர் ஹில், ரெசாங் லா, ரெசின் லா, சுசூல் வாலி என்று வரிசையாக எல்லையில் இருக்கும் முக்கியமான இடங்களை எல்லாம் இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பே இந்தியா கைப்பற்றிவிட்டது. இங்குதான் சீனா இந்தியாவிடம் வசமாக சிக்கி உள்ளது.

சீனாவிற்கு ஷாக்

சீனாவிற்கு ஷாக்

இதனால் எல்லையில் இனி சீனா என்ன செய்ய வேண்டும் என்றாலும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும். சீனா பாங்காங் திசோவின் பிங்கர் 4- மற்றும் 8 இரண்டையும் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாலும் கூட லடாக்கில் இந்தியாவின் கைதான் தற்போது ஓங்கி உள்ளது. அதிலும் சுசூல் பகுதியை இந்தியா முழுமையாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதனால் லடாக்கில் லேவில் எங்கே செல்ல வேண்டும் என்றாலும் சீனா இந்தியாவின் கண்ணில் சிக்காமல் செல்ல முடியாது.

சீனா அச்சம்

சீனா அச்சம்

கல்வான் மோதலுக்கு பின்பே இந்தியாவுடன் மோதுவது குறித்து சீனா இரண்டு மனநிலையில் இருக்கிறது. இந்த மோதல் காரணமாக சீனாவின் வீரர்கள் 100 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அங்கு அதிபர் ஜிங்பிங்கிற்கு எதிராக எதிர்ப்பு நிலவி வருகிறது. தற்போது மீண்டும் லடாக்கில் சீனாவிற்கு இந்தியா ஷாக் கொடுத்துள்ளது. இதனால் இந்தியாவுடன் எல்லையில் மோதுவது சரியான முடிவா என்று சீனா நினைக்க தொடங்கி உள்ளது.

பேசுவதற்கு முன் செய்தது

பேசுவதற்கு முன் செய்தது

இதனால்தான் ரஷ்யா மூலம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தூதுவிட்டது. எல்லையில் மோத முடியவில்லை. பேச்சுவார்த்தை மூலம் ஆதிக்கம் செலுத்த சீனா நினைத்தது. ஆனால் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் நடந்த மீட்டிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் நடந்த மீட்டிங் எதிலும் இந்தியா கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கவில்லை. எல்லையில் படைகளை குவித்துவிட்டுதான் இந்தியா பேச்சுவார்த்தைக்கே சென்றது.

இரண்டு வழிகளில் வைக்கப்பட்ட செக்மேட்

இரண்டு வழிகளில் வைக்கப்பட்ட செக்மேட்

நீங்கள் படைகளை வாபஸ் வாங்கினால், நாங்கள் வாபஸ் வாங்குவோம் என்று இந்தியா உறுதியாக கூறிவிட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பை ராணுவ ரீதியாகவும், பேச்சுவார்த்தை ரீதியாகவும் இந்தியா திறம்பட எதிர்கொண்டு இருக்கிறது. ஒரே நேரத்தில் சீனாவிற்கு இந்தியா இரண்டு பக்கமும் செக் மேட் வைத்துள்ளது. பொதுவாக எல்லையில் படையை குவித்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பது சீனாவின் ஸ்டைல். சீனாவின் கசப்பு மருந்தை இந்தியா சீனாவிற்கு கொடுத்துள்ளது.

இனி சீனா என்ன செய்யும்

இனி சீனா என்ன செய்யும்

அதிலும் ஸ்பான்கூர் கணவாய் பகுதியை இந்தியா பிடித்தது எல்லாம் சீனா கொஞ்சமும் நினைக்காத டிவிஸ்ட். சீனாவை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று இந்தியா புதிய ராஜாங்க முறையை மலேசியா, வியட்நாம், பூடான், தைவான் போன்ற நாடுகளுக்கு இந்தியா கற்றுக்கொடுத்துள்ளது. இதற்கு சீனா கண்டிப்பாக பதில் அளிக்கும் என்கிறார்கள். எல்லையில் சீனா குளிர் காலத்திற்கு முன் முக்கிய நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இதுதான் புதிய நிலைமை

இதுதான் புதிய நிலைமை

எல்லை பிரச்சனையில் இந்தியாவின் புதிய நிலைப்பாடு காரணமாக, முழுக்க முழுக்க எல்லையில் நிலைமை மாறி உள்ளது. இரண்டு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து உள்ளது. எல்லையில் இதற்கு முன் ரோந்து பணிகள் செய்யப்படாத இடங்களில் கூட படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் ஆயுதங்களுடன் ரோந்து செய்து வருகிறது. எல்லையில் இனி இதுதான் புதிய நிலைமை என்று கூறுகிறார்கள்.

English summary
Ladakh Standoff: How India taught world countries a lesson to tackle China?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X