Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனுப்பிய சம்மனை அமலாக்கப்பிரிவுக்கே திருப்பிய லலித் மோடி வழக்கறிஞர்..

Subscribe to Oneindia Tamil

மும்பை : ஐ.பி.எல். முறைகேடு குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கக் கோரி லலித் மோடிக்கு அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை அவரது வழக்கறிஞர் திருப்பி அனுப்பி விட்டார்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் ஒளிபரப்பு உரிமை தொடர்பாக வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப், மல்ட்டி ஸ்கிரீன் மீடியா இடையே 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உடன்பாட்டில், முன்னாள் தலைவர் லலித் மோடியும், வேறு சிலரும் ரூ.425 கோடி ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

lalith modi

இது தொடர்பான வழக்கில் லலித் மோடி 3 வார காலத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது.

இந்த சம்மன், மும்பையில் உள்ள அவரது வழக்கறிஞர் மெகமூத் எம். அப்டிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அந்த சம்மனை மத்திய அமலாக்க இயக்குனரகத்துக்கே திருப்பி அனுப்பி விட்டார்.

மோடியின் இங்கிலாந்து முகவரி, அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்திடம் உள்ளதாகவும், சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு சம்மனை அவரிடம்தான் அமலாக்க இயக்குனரகம் ஒப்படைக்க வேண்டும் என்றும் லலித் மோடி வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்த சம்மனை தான் பெற்றுக்கொள்வதற்கு லலித்மோடி அதிகாரம் வழங்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் முகமது அப்டி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+