வெள்ளம் காரணமாக அருணாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு... 16 தொழிலாளர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

தவாங்: அருணாச்சலப் பிரதேசம் தவாங் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அருணாசலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Landslide in Arunachal Pradesh’s Tawang kills 16

இந்நிலையில், தவாங் நகரில் இருந்து நான்கு கிமீ தொலைவில் உள்ள இடத்தில் 16 தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இன்று அதிகாலை 3 மணியளவில் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அப்படியே மண்ணில் புதைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், தொழிலாளர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக தலைமையகம் கூடுதல் துணை ஆணையர் லோத் கம்போ கூறினார்.

இந்த விபத்தில் 9 தொழிலாளர்களும் மண்ணில் புதைந்து உயிரிழந்து விட்டதாகவும், மாயமான 7 பேரைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+