மங்களூர் அருகே கடல் வெள்ளரிகளுடன் 16 இலங்கை மீனவர்கள் கைது ... படகு பறிமுதல்
மங்களூர்: ரூ. 72 லட்சம் மதிப்புள்ள கடல் வெள்ளரிகளுடன் இலங்கைப் படகு ஒன்றை மங்களூர் அருகே கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக படகஸில் இருந்த 16 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 16 பேரும் இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேராபானி பகுதியில இவர்களை கடலோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர். இது லட்சத்தீவுக்கு அருகே உள்ளது. மங்களூரிலிருந்து 200 கடல் மைல் தொலைவில் இந்த பவளப் பாறைப் பகுதி உள்ளது.

இதுகுறித்து கர்நாடகத்திற்கான கடலோரக் காவல் படை தலைவர் ராஜாமணி சர்மா கூறுகையில், கொழும்பு மரைன் என்று பெயரிடப்பட்ட படகை நாங்கள் பறிமுதல் செய்தள்ளோம். இவர்கள் இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். மேலும் 2 டன் கடல் வெள்ளரிகளையும் சட்டவிரோதமாக பிடித்துள்ளனர். இது மிகவும் கடுமையான குற்றமாகும்.
இவர்களை ஏப்ரல் 6ம் தேதி ஐஎன்எஸ் ராஜ்தூத் கப்பல் கண்டுபிடித்துத் தகவல் கூறியது. இதையடுத்து இவர்கள் பிடிக்கப்பட்டனர்.
பெரிய படகு மூலம் அப்பகுதிக்குப் போனால் பவளப் பாறைகள் சேதமடையும் என்பதால் செயின்ட் ஆண்டனி என்ற ஒரு மீன்பிடி படகு மூலம் சென்று இவர்களைக் கைது செய்தோம்.
பறிமுதல் செய்யப்பட்ட படகில் ஏர் கம்பர்சர்கள், 2 ஜிபிஎஸ் கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், 37.5 கிலோ எடை கொண்ட 16 காஸ் சிலிண்டர்கள் ஆகியவையும் இருந்தன.
ஏப்ரல் 1ம் தேதி முதல் இவர்கள் இங்கு முகாமிட்டு சட்டவிரோதமாக இதைச் செய்து வந்துள்ளனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications