நாட்டில் உள்ள 5,97,464 கிராமங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது... அது என்ன தெரியுமா?
நாட்டில் உள்ள 5,97,464 கிராமங்களுக்கும் மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 4 கோடி வீடுகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட உள்ளது.
டெல்லி: நாட்டில் உள்ள 5,97,464 கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சேனாபடி மாவட்டத்தில் உள்ள லீசாங் கிராமம் தான் கடைசியாக மின்சார இணைப்பு பெற்ற கிராமம்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்குவதற்காக, தீன்தயாள் உபாத்யாய் கிராம் ஜோதி யோஜனா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, இதுவரை மின்சார இணைப்பு இல்லாத கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கும் பணிகள் நடந்தன.

2015 ஆகஸ்ட் 15ல் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, 1000 நாட்களுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அப்போது, 18,452 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக நடந்த கணக்கெடுப்பின்போது, மேலும், 1,275 கிராமங்களுக்கும் மின்சார வசதி இல்லை என்பது தெரியவந்தது. அதையடுத்து இந்த கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கும் பணிகள் துவங்கின.
கடைசியாக மணிப்பூர் மாநிலத்தின் சேனாபடி மாவட்டத்தில் உள்ள லீசாங் கிராமத்துக்கு நேற்று மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம், நாடு முழுவதும் 5,97,464 கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு கிராமத்தில் பள்ளி, பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும், 10 சதவீத வீடுகளுக்கும் மின்சார வசதி அளிக்கப்பட்டால், அது மின்சார வசதி பெற்ற கிராமமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, 2019ம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் 4 கோடி வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க வேண்டும்.
கடைசியாக மின்சார இணைப்பு பெற்ற லீசாங் கிராமத்தில் மொத்தம் 19 குடும்பங்களே வசிக்கின்றன. 31 ஆண்கள், 34 பெண்கள் என அந்த கிராமத்தில் 65 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications