சம்பள மோசடி: முன்னாள் ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவின் சகோதரருக்கு 3 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

போபால்: பியூனின் சம்பளத்தில் மோசடி செய்ததற்காக முன்னாள் ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவின் சகோதரருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவின் சகோதரர் ஷம்பு தயாள் சர்மா. இவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கிறார். இவர் மாவட்ட தொழு நோய் அலுவலராக பணிபுரிகிறார். தமது வீட்டில் இளைஞர் ஒருவரை பியூன் வேலைக்கு அமர்த்தினார்.

பியூனுக்கு மாவட்ட ஆட்சியர் ரூ.2000 சம்பளம் வழங்க அனுமதித்து இருந்தார். ஆனால் மாதம் ரூ.500 மட்டுமே ஷம்பு தயாள் சர்மா வழங்கினார். தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் மோசடி நடப்பதை அறிந்த பியூன் மாவட்ட ஆட்சியரிடமும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடமும் முறையிட்டார்.

இதையடுத்து ஷம்பு தயாள் சர்மா மீது வழக்குப் பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து ஷம்பு தயாள் சர்மா மீது டி.டி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை மாவட்ட நீதிபதி வர்சா சர்மா விசாரணை நடத்தினார். நேற்று இந்த வழக்கில் ஷம்பு தயாள் சர்மாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+