இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது
Recommended Video

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் இன்று மாலை 6.59 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சார்பில் இன்று பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் ஏவப்படுகிறது. இதில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட இந்த செயற்கைக்கோள் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தப்படுகிறது.

இஸ்ரோ திட்டமிட்டபடி ஏற்கனவே, 7 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இதனை ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 6.59 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. இதற்கான 29 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் இந்த செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படுகிறது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறுகையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்ற செயற்கைக்கோள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோளுக்கான உதிரி பாகங்கள், அமைப்பு முறைகளை பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 70 பொறியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.
பின்னர் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதை அசம்பிள் செய்தனர். ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை தயாரிக்க தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமாக வருங்காலத்தில் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications