Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் போராடும்ம் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் 20 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி நதிநீர் மேலாண்மை, வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Law college students in Chennai holds hunger strike in their hostel

இந்நிலையில் தமிழக அரசு கோரிய ரூ.40,000 கோடி நிவாரணத்தில் வெறும் ரூ.1,748 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து விவசாய சங்க பிரிதிநிதிகள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் நாளுக்கு நாள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனால் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+