கன்யாகுமாருக்கு எதிராக டெல்லியில் வக்கீல்கள் பேரணி.. வந்தே மாதரம் முழக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜே.என்.யூ கன்யாகுமார் ஆதரவு போராட்டங்களுக்கு எதிராக வக்கீல்கள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தினர். பாட்டியாலா கோர்ட் முதல் இந்தியா கேட் வரை அவர்கள் பேரணி நடத்தி தங்கள் பலத்தை காண்பித்தனர்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆதரவு, அப்சல் குரு ஆதரவு கோஷங்களை மாணவர்கள் சிலர் எழுப்பியதாக வந்த குற்றச்சாட்டின்பேரில், தேசத்துரோக வழக்கின்கீழ், மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி பாட்டியாலா பகுதியிலுள்ள கோர்ட்டில் கன்யா குமாரை ஆஜர்படுத்தியபோது, அவரை சூழ்ந்து வக்கீல்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். பத்திரிகையாளர்களுக்கும் அடி விழுந்தது. கோர்ட்டுக்குள் வந்தே மாதரம் என கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிலையில், பாட்டியாலா கோர்ட் முதல் டெல்லி கேட் வரையில், இன்று மதியம், வக்கீல்கள் பிரமாண்ட பேரணி நடத்தி தங்கள் பலத்தை காண்பித்தனர். கன்யாகுமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறும் நிலையில், அதற்கு பதிலடியாக வக்கீல்கள் பேரணி நடத்தியுள்ளனர்.

பேரணி வழிநெடுக, வந்தே மாதரம், பாகிஸ்தான் ஒழிக என்பது போன்ற கோஷங்களை வக்கீல்கள் எழுப்பியபடி சென்றனர். கைகளில் தேசிய கொடியை ஏந்தியிருந்தனர். கன்யா குமார் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+