கோவாவில் வரலாறு படைத்த இந்திய கடற்படை
பெங்களூர்: முழுக்க முழுக்க நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான நேவல் ப்ரோட்டோடைப்-1(என்.பி.-1) கோவாவின் ஐஎன்எஸ் ஹன்ஸாவில் உள்ள கடலோர சோதனை தளத்தில் இருந்து சனிக்கிழமை லான்ச் செய்யப்பட்டது.
அந்த விமானத்தை பெங்களூரில் உள்ள தேசிய விமான சோதனை மையத்தின் தலைமை விமானி காம்ரேட் ஜெய்தீப் மாலோன்கர் ஓட்டினார். அந்த விமானம் ஓரத்தில் வளைவாக இருந்த ஓடுதளத்தில் இருந்து ஸ்கீ ஜம்ப் செய்தது.
எதிர்பார்த்ததை விட விமானம் நன்றாக செயல்பட்டதாக அது முதல்முதலில் பறந்ததை நேரில் பார்த்தவர்கள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்தனர்.

வரலாறு படைத்த கடற்படை
என்.பி.-1 முதல் பயணத்திலேயே சமூகமாக சென்று இந்த திடத்திற்கு ஊக்கம் அளித்துள்ளது என்று டிஆர்டிஓவின் (ஏரோ) டைரக்டர் ஜெனரல் டாக்டர் கே. தமிழ்மணி ஒன்இந்தியாவிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் கடினமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம். எம்.பி.-1 கடற்படையில் புதிய வரலாறு படைத்துள்ளது. என்.பி.-1 மேலும் 5 முறை சோதனை செய்யப்படும். சோதனையில் பெறும் புள்ளிகளை வைத்து அடுத்தக் கட்ட சோதனைக்கு தயாராவோம். இலகுரக போர்விமானமான என்.பி.-2 விரைவில் பெங்களூரில் சோதனை செய்யப்படும்.
போர் விமானங்களை தாங்கிச் செல்லும் இந்திய கப்பல்களில் இருந்து உள்நாட்டு தயாரிப்பில் உருவான பல போர் விமானங்கள் பறப்பதை விரைவில் பார்ப்போம் என நம்புகிறோம் என்றார்.

டிசைன் குழுக்கள்
அந்த போர் விமானத்திற்கு இந்திய கடற்படை இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த திட்டம் தாமதமாவது குறித்து கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.கே. தோவன் அண்மையில் கவலை தெரிவித்தார்.
என்.பி.-1 விமானத்தின் ஸ்கீ ஜம்ப் டிசைன் குழுவின் முயற்சியால் சாத்தியம் ஆனது என கடற்படை துணை தலைவர்(விமானம்) ரியர் அட்மிரல் டிஎம் சூடன் டெல்லியில் இருந்து ஒன்இந்தியாவிடம் தெரிவித்தார். என்.பி.-1 டேக் ஆஃப் ஆனது ஒரு வரலாற்று நிகழ்ச்சி ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விமானம்
என்.பி.-1 டேக் ஆஃப் ஆனது டெக்ஸ்ட் புக் ஸ்டைல் ஆகும் என்று ஏரோனாட்டிக்கல் மேம்பாட்டு ஏஜென்சியின் தலைவர் பி.எஸ். சுப்பிரமணியம் ஒன்இந்தியாவிடம் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் உக்ரைனை அடுத்து இத்தகையை லான்ச்சை நடத்திய மூன்றாவது நாடு இந்தியா தான். இந்த தொழில்நுட்பம் சில நாடுகளில் மட்டுமே உள்ளது. விமானம் ஓடுதளத்தில் நுழையும்போது, ஓடும்போது, வெளியேறும்போது அதன் செயல்களை நம்மால் கணிக்க முடியும். என்.பி.-1 விமானத்தில் அரெஸ்டர் ஹூக் பொருத்தப்படவில்லை. ஸ்கீ ஜம்ப் போன்று அரெஸ்டர் ஹூக் லேண்டிங் ஒன்றும் அவ்வளவு கடினம் அல்ல. இன்று நாம் படைத்த சாதனை பல காலம் நம் நினைவில் இருக்கும் என்றார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications