படிப்பை கைவிட மறுத்த மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற பேராசிரியர்
பெங்களூர்: தன்னை விட அதிகமாக மனைவி படித்திருக்கிறாள் என்ற தாழ்வுமனப்பான்மையின் காரணமாக மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசவேஷ்வரா நகரில் வசித்து வரும் 32 வயது சந்தோஷ் குமார், கல்லூரி விரிவுரையாளாராக பணி புரிந்து வருபவர். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் ப்ரீத்தா (28) என்ற கல்லூரி மாணவியுடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பின்னர் தனது மேற்படிப்பைத் தொடர விரும்பியுள்ளார் ப்ரீத்தா. ஆனால், இது சந்தோஷிற்கு உடன்பாடில்லை. ஏற்கனவே, திருமணத்தின் போது உறவினர்கள் பி.இ படித்த தன்னை விட தன் மனைவி அதிகமாக படித்திருப்பதாக கேவலமாக பேசிய மனவருத்தத்தில் இருந்துள்ளார் சந்தோஷ்.
இந்நிலையில், தனது எம்.டெக் படிப்பைத் தொடர நினைத்த ப்ரீத்தாவை ஆத்திரத்தில் கடப்பாரையால் தாக்கியுள்ளார் சந்தோஷ். இதில், தலையில் பலத்த அடி பட்டு மயங்கி விழுந்துள்ளார் ப்ரீத்தா. மனைவி இறந்து விட்டார் என்ற பயத்தில் வீட்டிலிருந்து தப்பி வெளியே சென்று விட்டார் சந்தோஷ்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ப்ரீத்தாவை அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக ப்ரீத்தா மரணமடைந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ப்ரீத்தாவின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், சந்தோஷிற்கு சொத்து வாங்குவதற்காக பணத்தேவை ஏற்பட்டதாகவும், அதற்காக ப்ரீத்தா வேலைக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதில் சந்தோஷிற்கு உடன்பாடில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ப்ரீத்தாவின் மேற்படிப்பைத் தொடர சந்தோஷ் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் ப்ரீத்தாவின் சகோதரர் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications