ஆதார் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றமே சொன்ன பிறகும், அடம் பிடிக்கும் வருமான வரித்துறை!
ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் சரி இந்த மாதத்துக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தே ஆக வேண்டும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி: ஆதார் நடைமுறை வழக்கில் உச்சநீதிமன்றம் ஆதாரை கட்டாயப்படுத்த முடியாது என்ற வகையில் தீர்ப்பளித்தாலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தே ஆகவேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதார் எண் எனப்படும் 12 இலக்க எண் அரசின் சமூக நல திட்டங்களுக்கு கட்டாயமாக்கியது மத்திய அரசு. இதனால் ஆதார் பெறாதவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கு வருமான வரித் துறை இந்த மாதம் 31-ஆம் தேதி வரை காலகெடு விதித்துள்ளது. இவ்வாறு இணைத்தால் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தது ஏற்கப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தது வருமான வரித்துறை.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில், தனி மனித ரகசியம் பாதுகாப்பது என்பது அடிப்படை உரிமை என்று உத்தரவிட்டது. இதனால் ஆதாரை மத்திய அரசு கட்டாயமாக்கமுடியாது என்று கருதப்பட்டது. அதில் ஒன்று பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதும் ஆகும்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் ஆதாருக்கு எதிராக தீர்ப்பை வழங்கியிருந்தாலும் இந்த மாத இறுதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது நிச்சயம் செய்தே ஆக வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு ஆதாரை இணைக்காதவர்களின் பான் எண் ரத்து செய்யப்பட்டுவிடும்.
கடந்த நிதியாண்டுக்காக அவர்கள் சமர்பித்த வருமான வரி கணக்கும் செல்லாததாகிவிடும் என்று தெரிவிக்கின்றனர் நிபுணர்கள்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications