இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியல் பரிமாற்றம்
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியல் ஒரே நேரத்தில் டெல்லியிலும், இஸ்லாமாபாத்திலும் உள்ள தூதரகங்கள் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அணுசக்தி நிலையங்களை தாக்கிக்கொள்வதில்லை என்று ஒப்பந்தம் செய்து கொண்டன. எனினும், இந்த ஒப்பந்தம் 1992-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் ஆண்டின் முதல் நாளில் தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். அதன்படி அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

அந்த வகையில், 25-வது ஆண்டாக இந்த ஒப்பந்தத்தின்படி தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியலை இருநாடுகளும் நேற்று பரிமாறிக்கொண்டன. ஒரே நேரத்தில் டெல்லியிலும், இஸ்லாமாபாத்திலும் உள்ள தூதரகங்கள் மூலம் இந்த பட்டியல் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இதேபோல் கைதிகள் பட்டியலையும் இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டன. இதன்படி பாகிஸ்தானில் உள்ள இந்திய கைதிகள் பற்றிய தகவல் இந்தியாவிற்கும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கைதிகள் பற்றிய விபரம் அந்நாட்டிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications