லோக்சபா தேர்தல்: சபாநாயகர் மீரா குமாரை எதிர்த்து மருமகள் போட்டி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் மாநிலம், சஸராம் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் லோக்சபா சபாநாயகருமான மீராகுமாரை எதிர்த்து அவரது மருமகள் மேதவி கிரிதி, மாயாவதி கட்சி சார்பாக நிறுத்தப்பட்டுள்ளார்.

மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜெகஜீவன் ராமின் மகள் மீரா குமார். லோக்சபா சபாநாயகராக இருக்கிறார். பீகார் மாநிலத்தில் அவரது தந்தை போட்டியிட்ட சஸராம் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இந்த முறையும் இதே தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Lok Sabha Speaker Meira Kumar files nomination papers

இந்நிலையில் ஜெகஜீவன்ராமின் பேத்தியும், மீராகுமாரின் அண்ணன் சுரேஷ் ராமின் மகளுமான மேதவி கிரிதி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு மீராகுமாரை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பினை மாயாவதி வழங்கியுள்ளார்.

இதற்கான அறிவிப்பை பீகார் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பாரத் பிந்த் நேற்று வெளியிட்டுள்ளார்.

சஸராம் தொகுதியில் இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மீரா குமார் குடும்பத்துக்கும், அவரது சகோதரர் குடும்பத்துக்கும் ஏற்கனவே பகை இருந்து வந்துள்ளது. ஜெகஜீவன் ராம் குடும்பத்தை சேர்ந்த அத்தையும் மருமகளும் ஒரே தொகுதியில் எதிர் எதிர் அணியில் போட்டியிடுவது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+