தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்... 97% மழை பெய்யும் - இந்திய வானிலை மையம்
2018ஆம் ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையான மழைக்காலத்தில் 97% மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டெல்லி: இந்த ஆண்டு மழைக்காலத்தில் போதிய மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும். செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும்.
இந்தியாவின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்கு பருவமழை முக்கிய பங்காற்றுகிறது. தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கு இரண்டு மாத கால அவகாசம் உள்ளது. பருவமழை நன்றாக இருந்தால் உற்பத்தி அதிகரிக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.

பருவமழை கணிப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2018ஆம் ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையான மழைக்காலத்தில் 97% மழைப்பொழிவு இருக்கும்" என்றும் 5% கூடுதலாகவோ குறைவாகவோ மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பருவமழை சூப்பர்
கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ஸ்கைமெட் வெதர் என்ற தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பிலும் இதே போன்ற தகவல் கூறப்பட்டது. அதில் 100% மழைப்பொழிவு உறுதி என்றும் 5% கூடுதலாகவோ குறைவாகவோ மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தற்போது வந்திருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் உறுதிசெய்திருக்கிறது.

கேரளாவில் தொடங்கும் மழை
இந்த ஆண்டு மே 15 ஆம் தேதியன்று கேரளாவில் பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், பருவமழை விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என்றும், தண்ணீர் பற்றாக்குறை நீங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பருவமழை இயல்பாக இருக்கும்
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நாட்டில் இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குநர் கே.ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் பருவமழை இயல்பாக இருக்கும். அதாவது, நீண்ட கால சராசரியில் 97 சதவிகித மழைப்பொழிவு இந்த ஆண்டு இருக்கும். மழை துவங்கும் அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும் என்று கூறினார்.

153 மாவட்டங்கள் வறட்சி
இதனிடையே இந்திய வானிலை மையம் நாடு முழுவதும் உள்ள 588மாவட்டங்களில் மழைப்பொழிவின் அளவுக் குறித்து ஆய்வு செய்தது. அதில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே 153 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

மழைப்பொழிவு குறைவு
கடந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்த 404 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 109 மாவட்டங்களில் லேசான வறட்சி நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் 153 மாவட்டங்கள் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறிய இந்திய வானிலை ஆய்வு மையம், கடந்த குளிர்காலத்தில் மழைப்பொழிவு குறைந்ததே இந்த வறட்சிக்குக் காரணம் என்று அறிவித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications