சிவன் தான் முஸ்லீம்களின் முதல் நபி: ஜாமியத் உலமா முப்தி சர்ச்சை பேச்சு
லக்னோ: எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார்.
ஜாமியத் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் புதன்கிழமை அயோத்தி சென்றனர். வரும் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்ராம்பூரில் நடக்கும் சமூக நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு துறவிகளுக்கு ஜாமியத் உலமா அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.

அப்போது ஜாமியத் உலமா முப்தி முகமது இலியாஸ் கூறுகையில்,
முஸ்லீம்களின் முதல் நபி கடவுள் சிவன் ஆவார். எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான். இந்தியாவை இந்து நாடு என்று அறிவிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனா மற்றும் ஜப்பானில் உள்ள மக்களை சீனர்கள், ஜப்பானியர்கள் என்கிறோம். அதே போன்று இந்தியாவில் உள்ளவர்களை இந்துஸ்தானியர்கள் என்கிறோம் என்றார்.
இல்யாஸின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications