காதலுக்கு கண்கள் கிடையாது.. மாணவர்கள் காதல் விஷயத்தில் கல்லூரி நிர்வாகத்திற்கு கேரள ஹைகோர்ட் குட்டு
மாணவர்களின் காதல் திருமணம் தனிப்பட்ட விஷயம், அதில் கல்லூரி நிர்வாகம் தலையிட அனுமதியில்லை என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொச்சி: கொச்சி கல்லூரி ஒன்றில் படித்துவந்த மாணவியும் மாணவனும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதையடுத்து, கல்லூரி நிர்வாகம் அவர்களை கல்லூரியிலிருந்து நீக்கியுள்ளது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கேரள உயர் நீதிமன்றம், "காதலுக்கு கண்கள் இல்லை. காதல் மனிதனின் இயற்கையான உணர்ச்சி. இவையெல்லாம் தனிப்பட்ட விஷயம், அவர்களுடைய சுதந்திரம் என்று கூறியுள்ளது.

கொச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வந்த 20 வயது மாணவி அதே கல்லூரியில் அதே துறையில் படித்துவந்த அவருடைய சீனியரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்மையில் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதை அறிந்த கல்லூரி நிர்வாகம் அவர்கள் இருவரையும் கல்லூரியை விட்டு நீக்கியுள்ளது.
கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்த்து மாணவியும் மாணவனும் கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முஹமது முஸ்டாக் விசாரித்தார்.
இந்த வழக்கில் கல்லூரி நிர்வாகம் தரப்பில், மாணவர்கள் படிக்கும்போது வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டது ஒழுங்கீனமானது. அந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முஹமது முஸ்டாக், "காதலுக்கு கண்கள் இல்லை. அது மனிதனின் இயல்பான உணர்ச்சி. இவையெல்லாம் தனிப்பட்ட விஷயம். இது அவர்களுடைய சுதந்திரம்" என்று கூறினார்.
மேலும், நீதிபதி கூறுகையில், சிலருக்கு சில விஷயங்கள் பாவமாக இருக்கும். அது மற்றவருக்கு பாவமில்லை. ஆனால், சட்டத்தில் சுதந்திரத்துக்கு இடம் உள்ளது. அதுதான் விடுதலையின் சாரம்.
நெருக்கமான உறவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அதில் தலையிடுவதற்கு கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் கிடையாது. இதைப் புரிந்துகொள்வதைல் கல்லூரி நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
அதோடு, மாணவியையும் மாணவனையும் கல்லூரி நிர்வாகம் மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அவர்களின் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று, நீதிபதி முஹமது முஸ்டாக் உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications