25ம் தேதி முதல் சமையல் காஸ் விநியோகஸ்தர்கள் ஸ்டிரைக்.. சிலிண்டர் தட்டுப்பாடு வரும்
டெல்லி: சீரான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செவ்வாய்கிழமை முதல் இந்தியா முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக சமையல் கேஸ் வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சமையல் கேஸ் வினியோகஸ்தர்கள் 900 பேர் உள்ளனர். இவர்கள் மூலம் 1 கோடியே 30 லட்சம் பேர் கேஸ் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகிறார்கள். மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் சமையல் கேஸ் விநியோகஸ்தர்கள்.
ஆனால், அது குறித்து நிரந்தரத் தீர்வு எட்டப்படாததால் இந்தியா முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட சமையல் கேஸ் விநியோகஸ்தர்கள் முடிவெடுத்துள்ளனர். வேலை நிறுத்தத்தின்போது வீடுகளுக்கு சமையல் கேஸ் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், போராட்டம் நீடித்தால் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகி உள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய சமையல் கேஸ்வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்திர பிரகாஷ், இந்திய சமையல் கேஸ் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பவன் சோனி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-












Click it and Unblock the Notifications