அகிலேஷ் யாதவுக்கு எதிராக பாஜக மகளிர் அணியினர் போராட்டம்– தண்ணீர் பீய்ச்சி கலைப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜகவின் மகளிர் அணியினர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து போலீசார் கூட்டத்தை கலைத்துள்ளனர்.
உத்தரபிரேத மாநிலம், படான் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் கடந்தவாரம் தலித் சிறுமிகள் 2 பேர் ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். பின்னர் இருவரையும் கொன்று ஒரு மாமரத்தில் தொங்கவிட்டனர்.
சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்தரை செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பாஜகவின் மகளிர் அணியினர் லக்னோவில் முதல்வர் அகிலேஷ் யாதவின் அலுவலகத்திற்கு வெளியே கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாஜகவினரை தடுக்க போலீசார் அப்பகுதியில் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். பாஜகவினர் மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களை விரட்ட போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகின்றனர். ஆனால் பாஜகவினர் அங்கு இருந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications