இந்த சண்டையைப் பாருங்க...!
லக்னோ: மாமூல் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரண்டு போலீஸார் சரமாரியாக நடு ரோட்டில் அடித்துக் கொண்ட செயல் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை விலக்க முடியாமல் போலீஸார் திணறிப் போய் விட்டனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
இணையதளங்களில் ஒரு வீடியோ பரபரப்பாக வலம் வருகிறது. உ.பி. தலைநகர் லக்னோவில் மக்கள் நெரிசல் மிக்க ஒரு இடத்தில் நடு ரோட்டில் இரண்டு போலீஸார் கட்டிப் புரண்டு சண்டை போடுகின்றனர். அவர்களை விலக்க 3 போலீஸார் கடுமையாக முயலுகின்றனர். ஆனால் முடியாமல் திணறுகின்றனர்.
சண்டையிடும் இரு போலீஸாரும் கட்டிப் புரண்டு ஆவேசமாக மோதிக் கொள்கின்றனர். சீருடையில் இருவரும் உள்ளனர். இதைப் பலர் கூடி வேடிக்கை பார்க்கின்றனர். ஆனாலும் கொஞ்சம் வெட்கப்படாமல் அந்த போலீஸார் சண்டை போடுவதில் மும்முரமாக உள்ளனர்.
லாரி டிரைவர்களிடம் வாங்கும் லஞ்சத்தைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது பழைய வீடியோ. வேறு காரணத்திற்காக நடந்த சண்டை என்று உ.பி போலீஸ் தரப்பில் காரணம் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications