ம.பியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு.. இரவே ஆளுநரை சந்திக்க திட்டம்!
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது.
போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது.
மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் மிகவும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளது. மெஜாரிட்டி பெற 116 தொகுதிகள் தேவை. இதில் இப்போதுவரை காங்கிரஸ் பாஜக இரண்டு கட்சிகளும் மெஜாரிட்டி பெறுவதற்கான இடங்களில் வெற்றிபெறவில்லை.

தற்போதைய நிலவரங்கள் படி மத்திய பிரதேசத்தில், பாஜக 109 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 114 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.
Congress party seeks an appointment late tonight with the Governor to stake their claims to form the govt in Madhya Pradesh. The party has sought appointment by sending an email and a fax too. #MadhyaPradeshElections pic.twitter.com/QEBb5qotuA
— ANI (@ANI) December 11, 2018
இந்த நிலையில் இன்னும் தேர்தல் முடிவுகள் வெளியாகாத நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது. இதற்காக இன்று இரவே ஆளுநரை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இதற்காக மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பாட்டீலை சந்திக்க அனுமதி கேட்டு மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சைகள் ஆதரவு இருப்பதாக கமல்நாத் தெரிவித்துள்ளார். ஆகையால் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஆளுநர் உடனடியாக காங்கிரஸ் உறுப்பினர்களை சந்திக்க மறுத்துவிட்டார். தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் முழுமையாக அறிவித்தே பின்பே ஆட்சி அமைப்பது குறித்து யோசிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications