அந்த இளைஞர் குடித்திருந்தார்; வீடியோ பொய்யானது - வாலிபரை எட்டி உதைத்த விவகாரத்தில் ம.பி அமைச்சர்!
போபால்: ம.பியில் பிச்சை கேட்க வந்த வாலிபரை தன் காலால் உதைத்ததாக வெளியான வீடியோ முற்றிலும் பொய்யானது என்றும், காலில் விழுந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாகவும் அமைச்சர் குசும் மெதலே தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் குசும் மெதலே, கடந்த அரசு நிகழ்வுக்காக பண்ணா மாவட்டத்திற்கு சென்றார். அங்குள்ள பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகளை முடித்துவிட்டு தான் புறப்பட வேண்டிய காரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த போது தன்னிடம் பிச்சை கேட்டு வந்த வாலிபரை குசும் மெதலே காலால் தள்ளிவிட்டதாக ஒரு விடியோ பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் குசும் மெதலே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, பிச்சைக் கேட்டு வந்த வாலிபரை காலால் உதைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு குசும் மெதலே மறுப்பு தெரிவித்துள்ளார். இளைஞர் ஒருவர் குடிபோதையில் நிதானம் இழந்து தன்னுடைய கால் அருகே வந்து விழுந்ததாகவும், அந்த இளைஞர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
"செய்தியாளர்களுக்கு பதிலளித்தபடி நான் சாலையில் சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் வாலிபர் ஒருவர் என் காலடியில் வந்து விழுந்தார். அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லை. அந்த வாலிபரின் முகத்தை கூட நான் பார்க்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோவை இன்னும் பார்க்கவில்லை. தொலைக்காட்சிகளில் வரும் வீடியோ முற்றிலும் பொய்யானது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications