மோடியை பற்றி இப்படியா பேசுவீங்க? வார்த்தையை விட்ட காங்., "தலை".. கொத்தோடு தூக்கிய போலீஸ்
போபால்: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யுமாறு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா படேரியாவை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராஜா படேரியாவை கண்டித்து மத்திய பிரதேசம் முழுவதும் பாஜகவினர் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜா படேரியா கைது செய்யப்பட்டிருப்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அம்மாநில காங்கிரஸார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

"அரசியல் சாசனத்தை அழித்துவிடுவார்"
மத்திய பிரதேசத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ராஜா படேரியா. இவர் நேற்று முன்தினம் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், "பாஜக ஆட்சியில் அரசியல் சாசனத்தின் அனைத்து சட்டப்பிரிவுகளும் மீறப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினரும், தலித் சமூகத்தினரும் பாஜக ஆட்சியில் துன்பப்படுகின்றனர். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இப்படியே போனால், அரசியல் சாசனத்தையே அவர் அழித்துவிடுவார்.

"மோடியை கொல்லுங்கள்"
அதுமட்டுமல்லால், நாட்டு மக்களை மத ரீதியில் பிரதமர் மோடி பிளவுப்படுத்தி வருகிறார். மோடி பிரதமர் பதவியில் தொடர்ந்தால், இந்தியாவில் தேர்தல் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். சர்வாதிகார ஆட்சி அமைந்துவிடும். எனவே, இந்திய அரசியமைப்புச் சட்டத்தை காக்க விரும்பினால் மோடியை கொல்வதற்கு தயாராக இருங்கள்" என ராஜா படேரியா பேசினார்.

போராட்டத்தில் குதித்த பாஜக
இந்நிலையில், ராஜா படேரியாவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜா படேரியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய பிரதேசம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டன. இதனிடையே, ராஜா படேரியா தனது பேச்சுக்கு நேற்று விளக்கம் அளித்துள்ளார். அதாவது, "பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற அர்த்தத்திலேயே நான் அவ்வாறு பேசினேன். இதை வேண்டுமென்றே பாஜகவினர் அரசியலாக்கி வருகிறார்கள்" என்றார்.

கைது நடவடிக்கை
எனினும், அவரது விளக்கத்தை பாஜக ஏற்கவில்லை. இதுகுறித்து மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் நரோதம் மிஸ்ரா கூறுகையில், "ராஜா படேரியாவின் பேச்சை நான் கேட்டேன். அதில் பிரதமர் மோடியை கொலை செய்யுமாறு அவர் கூறுவது அப்பட்டமாக கேட்கிறது. ஒருகாலத்தில், காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் கட்சியாக இருந்தது. ஆனால், இப்போதோ இத்தாலி நாட்டின் (சோனியா காந்தி இத்தாலி நாட்டவர்) கட்சியாகவும், முசோலினி கட்சியாகவும் மாறிவிட்டது" என்றார். இதனிடையே, பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் இன்று அதிகாலை ராஜா படேரியாவை போலீஸார் கைது செய்தனர்.
-
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல்












Click it and Unblock the Notifications