கலாம் பிறந்த அக்டோபர் 15 ஆம் தேதி ‘வாசிப்பு தினமாக' கொண்டாடப்படும்.. மகாராஷ்ட்ர அரசு அறிவிப்பு
மும்பை : மறைந்த அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதியை வாசிப்பு தினமாக கொண்டாடப்படும் என்று மகராஷ்ட்ர அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு நாடே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.

இந்நிலையில் மறைந்த மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை, பீகாரில் உள்ள கிஷான்கஞ்ச் வேளாண் கல்லூரிக்கு சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்து ஏற்கனவே அறிவித்துவிட்டது..
மகாராஷ்ட்ர அரசும் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ந்தேதியை ‘வாசிப்பு தினமாக' கொண்டாட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து பேசிய மகாராஷ்ட்ர மாநில கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே, ‘இந்தியாவின் தலைசிறந்த மாமனிதர் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான அக்டோபர் 15-ந்தேதியை ஆண்டுதோறும் வாசிப்பு தினமாக மராட்டிய பள்ளிகளில் கொண்டாடப்படும்' என தெரிவித்தார்.
அப்துல் கலாம் பிறந்த மண்ணை தன்னில் அடக்கிய தமிழக அரசும் அவரை பெருமைப் படுத்தும் வகையிலான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications