மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: காங்-தேசியவாத காங். கூட்டணியிலும் சிக்கல்! காங். தனித்துப் போட்டி?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸூடன் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மத்தியக் குழு இன்று ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளது.
288 தொகுதிகளில் 144 தொகுதிகளுக்கு குறைவாக ஒதுக்கும் எந்த முடிவையும் ஏற்கப்போவதில்லை என்பது தேசியவாத காங்கிரஸ் நிலைப்பாடு. ஆனால் இதனை காங்கிரஸ் ஏற்கவில்லை. 124 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என்கிறது காங்கிரஸ்.

இந்த சிக்கலாம் இரு கட்சிகளும் தேர்தலில் இணைந்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியில் இன்று அறிவிக்கப்படும் என, முதலமைச்சர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்துள்ளார்.
இதனால் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே பாஜக- சிவசேனா கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக தனித்துப் போட்டியிடலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டால் மகாராஷ்டிரா தேர்தலில் பலமுனைப் போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications