மலேகான் குண்டுவெடிப்பு: சாத்வி, புரோகித்துக்கு ஜாமீன் வழங்க தேசிய புலனாய்வு ஏஜென்சி எதிர்ப்பு
டெல்லி: மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சாத்வி பிரக்யாசிங் தாகுர் மற்றும் லெப்.கெணல் புரோகித் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தேசிய புலனாய்வு ஏஜென்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மலேகானில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி 3 குண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் பலியாகினர் .

முதலில் இந்த சம்பவத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வு அமைப்பினர், இந்த சம்பவத்துக்கு இந்துத்துவா தீவிரவாதிகளே காரணம் என கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து சாத்வி பிரக்யா சிங் தாகுர் மற்றும் லெப். கேணல் புரோகித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீது செவ்வாய்க்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, இருவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இருவரையும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வழக்கறிஞர் மரியபுதம் கூறினார். மேலும் இருவரும் கடந்த 6 ஆண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான விசாரணை தாமதமாகிறது என்பதாலேயே ஜாமீன் வழங்க வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல என்றும் வாதிடப்பட்டது.
அத்துடன் இந்த விசாரணைக்கான தாமதத்துக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி காரணம் அல்ல என்றும் 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வுதான் விசாரணையை தொடங்கியது; பின்னர்தான் தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டது..இதுதான் விசாரணை தாமதத்துக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக இருவரிடமும் மீண்டும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றும் வலியுறுத்தப்பட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications