மே.வங்க அமைச்சர் மீது குண்டு வீச்சு... ரயில்வே அமைச்சரே பொறுப்பு... போட்டு விளாசிய மம்தா!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அமைச்சர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான விசாரணையை மேற்கு வங்காள சிஐடி போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
ரயில்வே நிர்வாகம்தான் ரயில் நிலையத்திற்குள் பாதுகாப்பிற்கு பொறுப்பாகும்; மாநில அரசு அல்ல. எனவே ரயில்வே அமைச்சர் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
இந்த சம்பவத்தில் அமைச்சர் ஜாகிர் ஹூசைன் மருமகன் உள்பட மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு
மேற்கு வங்க மாநிலத்தின் தொழிலாளர் துறை அமைச்சராக இருப்பவர் ஜாகிர் ஹூசைன். இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள நிமிதிடா ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு வந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் திடீரென அமைச்சர் ஜாகிர் ஹூசைன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச் சென்றனர்.

அமைச்சர் படுகாயம்
இதில் படுகாயமடைந்த அமைச்சர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவத்தில் அமைச்சர் ஜாகிர் ஹூசைன் மருமகன் உள்பட மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று அமைச்சர் சிகிச்சை பெரும் மருத்துவமனைக்கு வந்தார்.

மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
அவரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். இந்த சம்பவத்தில் சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, ரயில்வே நிர்வாகம்தான் ரயில் நிலையத்திற்குள் பாதுகாப்பிற்கு பொறுப்பாகும்; மாநில அரசு அல்ல. எனவே ரயில்வே அமைச்சர் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

போலீசார் விசாரணை
இந்த நிலையில் இந்த ரயில் நிலைய தாக்குதல் தொடர்பான விசாரணையை மேற்கு வங்காள சிஐடி போலீசார் கையில் எடுத்துள்ளனர். மேற்கு வங்க சிஐடி போலீசார் குழுவினர் இன்று காலை சம்பவ இடத்திற்கு பார்வையிட்டனர். மேலும், வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications