மமதா பானர்ஜியின் "சாவி".. வைரலாகி வரும் கவிதை
மமதா பானர்ஜி எழுதிய கவிதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொல்கத்தா: மத்திய அரசில் ஒவ்வொருவரின் உதடுகளும் எவ்வாறு பூட்டப்பட்டுள்ளது என்பது குறித்து மம்தா பானர்ஜி எழுதிய கவிதை ஒன்று வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அரசியலை தவிர, அதிக அளவு கலை ஆர்வம் உடையவர். இசைக்கருவிகளை வாசிப்பார், அழகாக ஓவியம் வரைவார்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக கவிதைகளையும் நன்றாக எழுதுவார். இதுவரை 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார்.தற்போது வருகிற எம்பி தேர்தலில் பாஜகவுக்கு மாற்றாக பிரமாண்டமான எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்க பல கட்ட அம்சங்களை முன்னெடுத்து வருகிறார்.

தர்ணா
இந்நிலையில்தான் ஒரு கவிதையை எழுதி இருக்கிறார். டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் தர்ணாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் முன்பு இந்த கவிதையை எழுதி உள்ளார்.

18 வரிகள்
அந்த கவிதை மொத்தம் 18 வரிகளை கொண்டது. சாவி என்ற தலைப்பிட்டு எழுதிய அக்கவிதையை சமூக வலைத்தளத்தில் மம்தா பதிவிட்டுள்ளார். அந்த கவிதை முழுக்க முழுக்க ஜனநாயகத்தை வலியுறுத்தும் வகையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

ஜனநாயகம்
குறிப்பாக "மத்திய அரசில் ஒவ்வொருவரின் உதடுகளும் எவ்வாறு பூட்டப்பட்டுள்ளது, ஜனநாயகத்தை எப்படி இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் இந்த மனப்பான்மை ஒரு நாள் வெடித்து சிதறும்" என்று அந்த கவிதையில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி
ஜனநாயகத்தை பற்றிய கவிதையாக இருந்தாலும் பெரும்பாலான வரிகள் பிரதமர் மோடியை தாக்குவது போலவே இருக்கிறது என்று கூறப்படுகிறது. மம்தாவின் இந்த கவிதைதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications