மமதா பானர்ஜியின் "சாவி".. வைரலாகி வரும் கவிதை
மமதா பானர்ஜி எழுதிய கவிதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொல்கத்தா: மத்திய அரசில் ஒவ்வொருவரின் உதடுகளும் எவ்வாறு பூட்டப்பட்டுள்ளது என்பது குறித்து மம்தா பானர்ஜி எழுதிய கவிதை ஒன்று வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அரசியலை தவிர, அதிக அளவு கலை ஆர்வம் உடையவர். இசைக்கருவிகளை வாசிப்பார், அழகாக ஓவியம் வரைவார்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக கவிதைகளையும் நன்றாக எழுதுவார். இதுவரை 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார்.தற்போது வருகிற எம்பி தேர்தலில் பாஜகவுக்கு மாற்றாக பிரமாண்டமான எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்க பல கட்ட அம்சங்களை முன்னெடுத்து வருகிறார்.

தர்ணா
இந்நிலையில்தான் ஒரு கவிதையை எழுதி இருக்கிறார். டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் தர்ணாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் முன்பு இந்த கவிதையை எழுதி உள்ளார்.

18 வரிகள்
அந்த கவிதை மொத்தம் 18 வரிகளை கொண்டது. சாவி என்ற தலைப்பிட்டு எழுதிய அக்கவிதையை சமூக வலைத்தளத்தில் மம்தா பதிவிட்டுள்ளார். அந்த கவிதை முழுக்க முழுக்க ஜனநாயகத்தை வலியுறுத்தும் வகையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

ஜனநாயகம்
குறிப்பாக "மத்திய அரசில் ஒவ்வொருவரின் உதடுகளும் எவ்வாறு பூட்டப்பட்டுள்ளது, ஜனநாயகத்தை எப்படி இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் இந்த மனப்பான்மை ஒரு நாள் வெடித்து சிதறும்" என்று அந்த கவிதையில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி
ஜனநாயகத்தை பற்றிய கவிதையாக இருந்தாலும் பெரும்பாலான வரிகள் பிரதமர் மோடியை தாக்குவது போலவே இருக்கிறது என்று கூறப்படுகிறது. மம்தாவின் இந்த கவிதைதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications