மே.வங்கத்தில் திரிணாமுல் வெற்றி முகம்- ஆட்சியை தக்க வைக்கிறார் மமதா: எக்ஸிட் போல் முடிவுகள்!!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப் பதிவுகள் முடிவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தின் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் ஏபிபி- ஆனந்தா பத்திரிகா இணைந்து நடத்திய கருத்து கணிப்பின்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 178 இடங்களைக் கைப்பற்றி மமதா பானர்ஜி ஆட்சியைத் தக்க வைக்கிறார்.

இடதுசாரிகள் 110 இடங்களைக் கைப்பற்றுகின்றனர். இம்மாநிலத்தில் பாஜக 1 இடத்தில் வெல்லும் என்றும் இதர கட்சிகள் 5 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ்- சிவோட்டர்
இதேபோல் டைம்ஸ் நவ்-சிவோட்டர் இணைந்து நடத்திய எக்ஸ்பிட் போல் முடிவின் படி,
திரிணாமுல் காங்கிரஸ்- 167
இடதுசாரிகள் 75
காங்கிரஸ் 45
பாஜக 4
இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தொடர்ந்து தம்முடைய ஆட்சியைத் தக்க வைப்பார் என்பது உறுதியாகி உள்ளது.
இண்டியா டிவி
இண்டியா டிவி நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளிலும்
திரிணாமுல் 167;
இடதுசாரிகள் 75;
காங்கிரஸ் 45
இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications