கொல்கத்தா கமிஷனர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி- வீடியோ
டெல்லி: மேற்கு வங்கத்தை உலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவரை விசாரணைக்கு ஒத்துழைக்க கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. மேற்கு வங்க போலீசுக்கு எதிராக நேற்று சிபிஐ இந்த வழக்கை தொடுத்து இருந்தது.
கொல்கத்தா கமிஷனர் இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், மேற்கு வங்க அரசு சிபிஐ விசாரணையை தடை செய்ய கூடாது என்று இந்த மனுவில் சிபிஐ கோரிக்கை வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.
Feb 05, 2019, 6:27 pm IST
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா முடிவுக்கு வந்தது
சந்திரபாபு நாயுடுவுடன் நடந்த சந்திப்புக்குப் பின்னர் போராட்டத்தை வாபஸ் பெற்றார் மமதா
Feb 05, 2019, 5:00 pm IST
மமதா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
கொல்கத்தாவுக்கு நேரில் வந்து மமதாவை சந்தித்தார் நாயுடு
கொல்கத்தா கமிஷனரை கைது செய்ய சென்றது ஏன்? : சிபிஐக்கு மேற்கு வங்க போலீஸ் சம்மன்
அரசின் அனுமதி இன்றி கமிஷனரை விசாரிக்க சென்றது ஏன்? - சம்மனில் கேள்வி
Feb 04, 2019, 3:25 pm IST
தாம் நடத்தும் இந்த போராட்டம் அமைதியான, சத்தியாகிரக போராட்டம் – மமதா
பிப்.8ம் தேதி வரை போராட்டம், பேரணிகள் தொடரும் என்று மமதா அறிவிப்பு
Feb 04, 2019, 3:21 pm IST
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மமதா பானர்ஜி பேட்டி
பள்ளித்தேர்வுகள் துவங்கும் வரை தர்ணா போராட்டம் நீடிக்கும் - மமதா தகவல்
ஜனநாயகம் சீர்குலைந்ததற்கு காரணம் மத்திய அரசே மமதா புகார்
பாஜகவை எதிர்ப்பவர்களை சிறையில் அடைப்பதே மத்திய அரசின் நோக்கம்
Feb 04, 2019, 1:46 pm IST
மமதாவிற்கு ஆதரவு அளிக்க கொல்கத்தா விரைகிறார் திமுக எம்.பி., கனிமொழி
இன்று இரவே கொல்கத்தா சென்றடைகிறார் கனிமொழி
Feb 04, 2019, 12:28 pm IST
விசாரணைக்கு ஒத்துழைக்காததால் போலீஸ் கமிஷனர் மீது சிபிஐ நடவடிக்கை- ராஜ்நாத்சிங்
பல முறை சம்மன் அனுப்பியும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஆஜராகவில்லை
Feb 04, 2019, 12:28 pm IST
சிபிஐ vs மமதா மோதல்: மக்களவையில் நடைபெறும் விவாதத்தில் பெரும் அமளி
சிபிஐயை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் அமளி
சிபிஐயை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கம்
சிபிஐ vs மமதா விவகாரம் லோக்சபாவில் எதிரொலிக்கிறது
லோக்சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கோஷம்
சபாநாயகர் இருக்கை முன்பாக நின்று கோஷம்
மேற்கு வங்க அரசு நடவடிக்கை மரபுக்கு எதிரானது- ராஜ்நாத்சிங் விளக்கம்
Feb 04, 2019, 12:19 pm IST
யாரை காப்பாற்றுகிறார் மமதா பானர்ஜி? பிரகாஷ் ஜவடேக்கர் கேள்வி
விசாரணையிலிருந்து தப்பிக்க மமதா பானர்ஜி முயற்சி
சாரதா சிட் பண்ட் மோசடியில் அதிக விவரம் தெரிந்தவரை விசாரிக்க சிபிஐ முடிவு
Feb 04, 2019, 11:06 am IST
சாரதா சிட் பண்ட் புகார் தொடர்பான ஆதாரங்களை கொல்கத்தா கமிஷனர் அழித்து விட்டார் - சிபிஐ
ஆதாரம் அழிக்கப்பட்டதற்கு ஆதாரம் எங்களிடம் உள்ளது - சிபிஐ
ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் சமர்ப்பியுங்கள் - சுப்ரீம் கோர்ட்
அழிக்கப்பட்டிருந்தால் கமிஷனர் வருந்தும் அளவுக்கு கடும் நடவடிக்கை எடுப்போம்- சுப்ரீம் கோர்ட்
சிபிஐ வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் சுப்ரீம் கோர்ட் மறுப்பு
READ MORE
9:31 AM, 4 Feb
மேற்கு வங்க அரசு நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல சிபிஐ திட்டம்
9:31 AM, 4 Feb
சிபிஐக்கு எதிராக கொல்கத்தாவில் மமதா பானர்ஜி தர்ணா தொடருகிறது
West Bengal Chief Minister Mamata Banerjee at 'Save the Constitution' dharna in #Kolkata. She has been staging dharna since last night over CBI issue. pic.twitter.com/rFLuBIghfs
Mamata Vs CBI Live Updates in Tamil: West Bengal Chief Minister Mamata Banerjee on Sunday extended her support to Kolkata Police Commissioner Rajeev Kumar, who has been summoned by the CBI in connection with Rose Valley and Saradha ponzi scams, accusing the BJP leadership of pursuing political vendetta. Here is the live updates.