மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அப்செட்டில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது கட்சி இரண்டாக உடையும் சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் மம்தா கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதற்கு பின்னால் பாஜகவின் கேம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜகவிடம் தோல்வியடைந்தது. மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை இழந்தார். மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட 80 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களுடன் தற்போதைய சட்டசபையில் இக்கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.

Mamata

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் சோவன்தேப் சட்டோபாத்யாயை மம்தா தரப்பு பரிந்துரைத்தது. இதற்காக சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட கடிதத்தில், பல எம்எல்ஏக்களின் கையெழுத்துக்கள் போலியாகப் போடப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த புகார்களை உறுதி செய்யும் விதமாக, ஒருபடி மேலே சென்று, கட்சியின் இளம் எம்எல்ஏவான ரித்தோ பிரதா பானர்ஜி மற்றும் சந்தீபன் சஹா ஆகிய இருவரும் தங்களின் கையெழுத்து போலியானது என்று சபாநாயகரிடம் முறைப்படி புகார் அளித்தனர்.

இதனால் கோபமடைந்த டிஎம்சி தலைமை, ஜூன் 1-ஆம் தேதி ரித்தோ பிரதா பானர்ஜி மற்றும் சந்தீபன் சஹா ஆகிய இருவரையும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று கூறி உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கியது.

பாஜகவின் கேம்

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அடுத்த இரண்டு நாட்களில், ரித்தோ பிரதா பானர்ஜி ஒட்டுமொத்த டிஎம்சி தலைமைக்கே அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளார். அதாவது, கட்சியின் 80 எம்எல்ஏக்களில் 58 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்துடன் அவர் மேற்கு வங்க சட்டமன்ற சபாநாயகரைச் சந்தித்தார். பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தனக்கு இருப்பதால், சட்டசபையின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக ரித்தோ பிரதா பானர்ஜியை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் அவருக்கான தனி அலுவலகமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கருப்பு ஆடு

இந்த விவகாரத்தை பொறுத்தவரை, ரித்தோ பிரதா பானர்ஜிதான் கருப்பு ஆடாக பார்க்கப்படுகிறார். காரணம், இவர் பூர்வீக திரிணாமுல் காங்கிரஸின் ஆள் கிடையாது.

இவரை வளர்த்தது மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். மாணவர் பருவத்திலிருந்து இவர் அரசியல் களத்தில் இருக்கிறார். சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய செயலாளராகவும், சிபிஎம்-ன் ராஜ்யசாப உறுப்பினராகவும் இவர் இருந்திருக்கிறார். ஆனால், கட்சி ரகசியங்களை கசியவிட்டது, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டது, தனிமனித ஒழுக்க மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

யார் இந்த ரித்தோ பிரதா பானர்ஜி?

அதன் பின்னர், திரிணாமுல் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டு நார்மல் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இப்போது மம்தா பானர்ஜிக்கு எதிராக திரும்பி, எதிர்க்கட்சி தலைவராகியிருக்கிறார். முன்னதாக இவரை பாஜகதான் இயக்குகிறது என்று சிபிஎம் சந்தேகம் தெரிவித்திருந்தது. தற்போது அதே குற்றச்சாட்டை மம்தா தரப்பும் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+