நான் ஏன் உங்களை அறைய போகிறேன்?.. மொழியை புரிந்து கொள்ளுங்கள்.. மோடிக்கு மம்தா பதில்
கொல்கத்தா: நான் ஏன் உங்களை அறைய போகிறேன். முதலில் மொழியை சரியாக புரிந்து கொள்ளுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பதில் அளித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரகுநாதபூரில் பேசுகையில் பிரதமரை அறையுங்கள் என மக்களிடம் பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி பாங்குரா பொதுக் கூட்டத்தில் பேசுகையில் மம்தா என்னை அறைந்தால் அதை ஆசிர்வாதமாக கருதுவேன் என தெரிவித்தார்.
இது குறித்து புருலியா மாவட்டத்தில் சிமுலியாவில் நடந்த திரிணமூல் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் கூறுகையில் நான் மோடியை அறைவேன் என கூறியதாக அவர் கூறுகிறார். நான் சொன்னது ஜனநாயக ரிதீயில் அறைவது என கூறினேன்.
தேர்தல் ரிசல்ட்டை கணித்த முதலீட்டாளர்கள்? பங்குச் சந்தை தொடர்ந்து சரியும் பின்னணி
முதலில் மொழியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். ஜனநாயக ரீதியில் அறைவோம் என்றால் மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் ஜனநாயக ரீதியில் அறைய வேண்டும் என கூறினேன். மற்றபடி நான் ஏன் பிரதமரை அறைய போகிறேன்.
மக்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதைதான் அப்படி சொன்னேன் என மம்தா விளக்கமளித்துள்ளார்.