ஆந்திராவில் ஒரு கவுசல்யா சம்பவம்.. மகளை வீட்டிலேயே கொன்று நாடகம்… தந்தை கைது
பிரகாசம்:ஆந்திர மாநிலத்தில் வேறு சாதியைச் சேர்ந்த தமது கல்லூரி நண்பரை காதலித்ததால், பெற்ற மகளை தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரகாசம் மாவட்டம், தாலூர் வட்டம், கோதபாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கே.வெங்கா ரெட்டி. அவரின் மகள் வைஷ்ணவி, ஓங்கோல்நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்தார். தான் படிக்கும் கல்லூரியில் வேறு சாதியை சேர்ந்த நண்பரை வைஷ்ணவி காதலித்துள்ளார்.

இருவரும் இரு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதைச் சமீபத்தில் அறிந்த வைஷ்ணவியின் தந்தை வெங்காரெட்டி கண்டித்துள்ளார். ஆனால் காதலை வைஷ்ணவி கைவிடவில்லை.
பெற்றோரின் நெருக்கடி அதிகரிக்கவே, சில நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி, கல்யாணம் செய்துகொண்டு மார்காபுரம் நகரில் ஒரு வீடு எடுத்து தமது காதலருடன் வசிக்க தொடங்கியுள்ளார். இதை அறிந்த வெங்கா ரெட்டி, மகள் வைஷ்ணவியை கண்டுபிடித்து, வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால், தந்தைக்கும், மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வைஷ்ணவி மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு வெங்கா ரெட்டி தகவல் அளித்துள்ளார்.சம்பவம் அறிந்த போலீசாருக்கு சந்தேகம் எழவே, கோதபாலம் கிராமத்துக்கு சென்றுள்ளனர்.
வைஷ்ணவியின் உடலையும் அவர்கள் பரிசோதனை செய்தனர்.அப்போது வைஷ்ணவியின் கழுத்தில் பலத்த காயமும், உடலில் காயமும் இருப்பதை கண்டுபிடித்தனர். உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
மேலும், தாலூர் போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மகளைக் கொலை செய்ததாக வெங்கா ரெட்டியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகாசம் மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 4 ஆணவக் கொலைச் சம்பவம் இதுவாகும், என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications