"படம்" போடப் போவதாக மிரட்டியே 6 மாதமாக பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
ஹைதராபாத்: இணையத்தில் ஆபாசப் படங்களை வெளியிடப்போவதாக மிரட்டி, இளம்பெண் ஒருவரைக் கடந்த ஆறு மாதங்களாக பலாத்காரம் செய்து வந்த இளைஞரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் ஜீசான் அகமது (23). இவர் கடந்த ஆறு மாதங்களாக இளம்பெண் ஒருவரை மிரட்டி, பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
தன்னிடம் அப்பெண்ணின் ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறிய ஜீசான், பணம் தராவிட்டால் அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த அப்பெண், கருக்கலைப்பும் செய்துள்ளார்.
இந்நிலையில், இளைஞரின் மிரட்டலைச் சகித்துக் கொள்ளமுடியாத அப்பெண், போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, ஜீசானைப் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஜீசான் மட்டுமின்றி இன்னும் வேறு சிலருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவர் என ஹைதராபாத் துணை கமிஷனர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications