தெரு நாயுடன் உறவு கொண்ட 52 வயது நபர்.. புனேவில் கொடூரம்!
புனே: புனேவில் தெரு நாயுடன் உறவு கொண்டு போலீஸிடம் சிக்கியுள்ளார் ஒரு 52 வயது நபர்.
இந்த நபரின் வக்கிரத்தைப் பார்த்து அதிர்ந்து போன பக்கத்து வீட்டுக்காரர் போலீஸில் தகவல் சொல்ல அவர்கள் விரைந்து வந்து அந்த நபரைக் கைது செய்தனர்.
நாராயண் பேட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபரின் பெயர் ஹனுமந்த் தத்தப்பா மனே.
சம்பவத்தன்று தெருவில் சுற்றித் திரிந்த ஒரு நாயை தனது வீட்டுக்குள் அழைத்துப் போயுள்ளார் மனே. பின்னர் அங்கு வைத்து தனது வக்கிரத்தை காட்டியுள்ளார். அதை சந்தீப் நாம்தேவ் ராத் என்ற காய்கறி விற்கும் நபர் பார்த்து விட்டு அதிர்ந்தார்.
இதையடுத்து அவர் விஷாரம்பாக் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்து வந்த போலீஸார் மனேவைக் கைது செய்தனர்.
சம்பவத்தன்று நல்ல குடிபோதையில் இருந்துள்ளார் மனே. இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்த அவர் தெருவில் திரிந்த நாயை வீட்டுக்குள் அழைத்துப் போனதைப் பார்த்த ராத்துக்கு சந்தேகம் வரவே, நைஸாக பின் தொடர்ந்து வந்து கதவு துவாரம் வழியாக வீட்டுக்குள் பார்த்தபோதுதான் நடந்த கருமம்
தெரிய வந்து அதிர்ந்தார்.
மனே கர்நாடகத்தைச் சேர்ந்தவர் ஆவார். திருமணமானவர். மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அனைவரும் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர். மனே மட்டும் புனேவில் வசிக்கிறார். 1988ம் ஆண்டு முதலே இங்குதான் அவர் வசித்து வருகிறாராம்.
அவர் மீது முறையற்ற உறவு கொண்டது தொடர்பான பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், விலங்குகள் சித்திரவதை தடுப்புச் சட்டத்தின் கீழும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.