போதையில் வந்த மனைவியை அடித்துக் கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை - டெல்லி கோர்ட் உத்தரவு
டெல்லி: குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்த மனைவியை அடித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வினோத் குமார், கடந்த 2004ம் ஆண்டு சுமிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில், சுமிதாவின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதை வினோத் உணர்ந்தார்.

2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலையில் இருந்து வீடு திரும்பிய வினோத், சுமிதா வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்பிய சுமிதா மது போதையில் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வினோத், சுமிதாவை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சுமிதாவின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வினோத் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வினோத்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி விமல் குமார் யாதவ் உத்தரவிட்டார்.
மேலும், ‘இந்தக் கொலையில் திட்டமிட்ட சதியோ, முன்திட்டமோ, மனைவியை கொன்றுவிட வேண்டும் என்ற வன்மமோ இருந்ததாக தெரியவில்லை. வீட்டை விட்டுச் சென்ற மனைவி இரவு 10 மணிக்கு மேல் குடிபோதையில் வீடு திரும்பியதை கண்டு உணர்ச்சிவசப்பட்ட குற்றவாளி, எவ்வித ஆயுதத்தையும் உபயோகிக்காமல் மனைவியை ஆத்திரத்தில் அடித்துக் கொன்றதாகவே இவ்வழக்கை கருத வேண்டியுள்ளது.
எனவே கொல்ல வேண்டும் என்ற நோக்கமில்லாமல் பிறர் உயிருக்கு காயங்களின் மூலம் தீங்கு விளைவிக்கும் குற்றமாக இதைக் கருதி குற்றவாளிக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது' என தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, இதுபோன்ற சூழ்நிலையில் கணவன் ஆத்திரப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. எனினும், இத்தகைய கொடூர தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் சற்று சிந்தித்திருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications