மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு தெருவில் நடந்த நபர்

Subscribe to Oneindia Tamil

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் 60 வயது நபர் ஒருவர் தனது மனைவியின் தலையை வெட்டி அதை கையில் பிடித்துக் கொண்டு சாலையில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கத்ராஜ் பகுயில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் காவலாளியாக இருப்பவர் ராமு சவான்(60). அவருக்கு தனது மனைவி சோனுபாய்க்கும்(45), மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

Man Beheads Wife; Walks on Road With Her Head

இதையடுத்து அவர் இன்று தனது மனைவியின் தலையை கோடரியால் வெட்டினார். வெட்டிய தலையை ஒரு கையிலும், கோடரியை மறுகையிலும் பிடித்துக் கொண்டு அவர் சாலையில் நடந்து சென்றார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை வழியில் பார்த்த போலீசார் ராமுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் ராமு மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

ராமு கத்ராஜ் பகுதியில் தனது மனைவி, இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். கொலை தொடர்பாக ராமுவின் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+